சைதை துரைசாமி மீது ரூ 30 கோடி நிலமோசடிப் புகார்

வெள்ளி, 25 மார்ச் 2016 (05:53 IST)
சென்னை மேயர் சைதை துரைசாமி மீது ரூ 30 கோடிமதிப்பிலான நிலமோசடிப் புகார் எழுந்துள்ளது.
 

 
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த நாபலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவராஜுலு, சுப்பிரமணி, நடராஜன் ஆகியோருக்கு சொந்தமான 23.65 ஏக்கர் நிலம் அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் அபகரித்து கொண்டாதாக கூறப்படுகிறது.
 
மேலும், இந்த நிலத்தை கடந்த 1991 ஆம் ஆண்டு, சென்னை மேயர் சைதை துரைசாமியின் தந்தை சாமியப்ப கவுண்டருக்கு அவர்கள் அவசரகதியில் விற்பனை செய்துள்ளனர் என புகார் எழுந்தது.
 
இந்த நிலத்தை மீட்டு தர வேண்டும் அரசு உயர் அதிகாரிகள் வரை புகார் அளித்தும் இது வரை எந்தவித  நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுகிறது. மேலும், இது குறித்து, தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர்.
 
ஆனால், இந்த நிலஅபகரிப்பு குறித்து, சென்னை மேயர் சைதை துரைசாமி விளக்கம் ஏதும் இதுவரை அளிக்கவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்