ஏரி, குளம் உள்ளிடட்ட நீர்நிலைகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாததால், அங்கு ஆக்கிரமித்துள்ள இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்த மனுவில், கொரட்டூர் ஏரிப் பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி பட்டா வழங்கி, ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.
இது குறித்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஏரி, குளம் உள்ளிடட்ட நீர்நிலைகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை என்பதால், அங்கு ஆக்கிரமித்துள்ள இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று கூறினர்.