புஜ தொழிலாளர் முன்னணியின் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ்
சாலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று, தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று அறிவித்தபடி, தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
பின்பு, கைது செய்த அனைவரையும் கும்முடிப்பூண்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர். மேலும், இடமின்மை காரணமாக அருகில் உள்ள ஒரு கோயிலின் உள்ளே அடைத்துவைத்தனர். பின்பு, அனைவரையும் விடுதலை செய்தனர்.