காங்கிரஸ் மூத்த தலைவர் ​குமரி அனந்தனுக்கு திடீர் மூச்சு திணறல்: மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (18:31 IST)
தமிழகத்தில் மது விலக்கு கோரி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு நெல்லை அருகே திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிழே விழந்தார். தற்போது, பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

 
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தமிழகம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்தக் கோரி, கடந்த டிசம்பர் 25ம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார், தற்போது, 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரப்புரை செய்து வருகிறார். 46வது நாளான இன்று நெல்லை மாவட்டம், பொன்னாகுடி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிழே விழுந்தார். 
 
அப்போது, அவருடன் இருந்த தொண்டர்கள் உடனடியாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், தற்போது, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்