புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ,வாக நீடிக்கத் தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மனுவில் கூறியிருந்தாவது,
ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, தனது சாதி குறித்து தவறான தகவலை தெரிவித்திருந்தார். இது குறித்து அப்போது, தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பிறந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றுதான் அரசு ஆணை உள்ளது. ஆனால் உடுமலைப்பேட்டை தாலுகாவில் பிறந்த கிருஷ்ணசாமிக்கு கோயம்புத்தூர் தெற்கு தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.