இந்த படுகொலை தொடர்பாக கொலை நடந்த மறுநாளே 14ஆம் தேதி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதற்கு மறுநாள் இந்த படுகொலையில் ஈடுபட்ட பழனியை சேர்ந்த மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயார் அன்னலெட்சுமி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரி உத்தரவிட்டார்.