பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது போலவே, கோடநாடு கொலை-கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் தீர்ப்பு வரும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை தீர்ப்பின் மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்று நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், “அதிமுக ஆட்சியில் விளையாட்டு துறை அமைச்சர் யார் என்பதே தெரியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு வீரர்கள் இங்கே வந்து கலந்து கொள்ளும் அளவுக்கு விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்றும் மற்றொரு கேள்விக்கு முதல்வர் பதில் அளித்தார்.