போலீசார் நடத்திய விசாரணையில் ‘திருடியதாக பிடிபட்ட அந்த பெண் கேரள மாநிலம் மனக்காடு சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த சாந்தி (53) என்பதும் எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் சென்னை பூந்தமல்லி அருகே தனது தோழி வீட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. மேலும், இவர் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது போல் நடித்து அருகில் இருப்பவர்களிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடுவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சாந்தியை போலீசார் கைது செய்து, புழல் ஜெயிலில் அடைத்தனர்.