இதற்கிடையே ரக்ஷாபந்தனையொட்டி, டுவிட்டரில் கீர்த்தி ஒரு டுவிட் செய்திருந்தார். அதில், ”எங்க இருக்கீங்க சதீஷ், ராக்கி கட்ட காலையில இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்” என டுவிட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து டுவிட் செய்திருந்த சதீஷ், ”ஹே கீசு மா பப்ளிக்ல இப்டியே பேசு, உலகம் அப்ப தான் நம்மல நம்பும்” என தெரிவித்திருந்தார்.
மேலும், பட நிகழ்ச்சியில் இருவரும் மாலையுடன் நின்றிருந்த புகைப்படங்கள் பரவியது. நடிகர் இளையதளபதி விஜய்யும், இவர்கள் காதல் தெரிந்து வாழ்த்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.