கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் - கரூர் - திருச்சி இடையே ரயில் ரத்து

Sinoj

வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:14 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில்  இன்று கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் - கரூர் - திருச்சி இடையே ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கரூர் - திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை இன்று  (19.01.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் நாளை கரூரிலேயே நிறுத்தப்படும் எனவும், கரூர் முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுவதாகவும், மறு மார்க்கத்தில் திருச்சிலிருந்து இன்று  மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணியளவில் புறப்படும் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்