கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சு வலி. மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (06:22 IST)
அதிமுகவின் சசிகலா அணியின் ஆதரவு எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுத்ததால் அவரை தேர்ந்தெடுத்த திருவாடனை தொகுதி மக்கள் அவர் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.




சமீபத்தில் அவர் தொகுதிக்கு சென்றபோது மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்ததோடு, தேவர் சிலைக்கு கூட மாலை அணிவிக்க முடியாமல் திரும்பினார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு நிலையில் கருணாஸ் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று அவருடைய மனைவியும் பிரபல பாடகியுமான கிரேசி அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அவருடைய மனைவியை மிகவும் வேதனைப்பட வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்