திமுக கூட்டணி தரப்பில், ஸ்டாலின், கருணாநிதி, இளங்கோவன் என அழைப்பு விடுத்து வருகின்றனர். மக்கள் நல கூட்டணி சார்பில் வைகோ, திருமா., என அனைத்து தலைவர்களும் அழைப்பு விடுத்து வருகின்றனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் உட்பட பல நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், திமுக-தேமுதிக கூட்டணி ஏன் இழுபறியில் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? என ஒரு நிருபர் கேட்டார். அதற்கு கருணாநிதி ‘பதில் கூற விரும்பவில்லை’ என்று மழுப்பலாக பதில் கூறினார். அதற்கடுத்து தேமுதிக, திமுக கூட்டணியில் இணையும் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என அந்த நிருபர் கேட்டார்.