இதனையடுத்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது அதிமுக அரசு. இந்நிலையில் சட்டசபை உறுப்பினர்கள் பதவியேற்புக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி முதல் வரிசையில் உள்ள எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அமரும் இடத்தில் அமர்ந்து பதவியேற்றுக் கொண்டார். பின்னர் சபாநாயகர் தனபலிடம் சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கைவிடப்பட்டது.