திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கரூர் வெங்கமேட்டில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, ’’60 ஆண்டுகளில் சின்னத்தை, கொள்கையினை, கொடியினை திமுக மாற்றவில்லை.
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர்., வைகோ வெளியேறியபோது, நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ். போன்றவர்கள் துரோகம் செய்த போது கலங்காத திமுக தலைவர் கலைஞர், ஒருவர் [விஜயகாந்த்] கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக கலங்கி விட மாட்டார்.
ஜெயலலிதா எந்த கஷ்டமும் படாமல் அதிமுகவை கைப்பற்றினார். ஆனால் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகி புண்பட்டு, பண்பட்டு, இன்று மேம்பட்ட தலைவராக திகழ்கிறார். கலைஞர் ஆசியுடன் தமிழகத்தின் தலைமை பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்பார். மக்களுக்கு பயனளிப்பார்.