கடந்த சில மாதங்களாக நோயினால் தாக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியபோது, கண்ணீருடன் அந்தச் செய்தியை என்னிடம் திருச்சி சிவா தெரிவித்தார்.
மனைவியை இழந்து வாடும் சிவாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.