நேபாள நிலநடுக்கம்: திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி செய்ய கருணாநிதி கோரிக்கை

புதன், 29 ஏப்ரல் 2015 (15:00 IST)
நேபாள நிலநடுக்கத்திற்கு திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி செய்ய திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் தரைமட்டமாகி தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் துயர் துடைப்பு நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை அளிக்கப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளது.
 
இந்தநிலையில், திமுக சார்பிலும் இந்த துயர் துடைப்பு நிதிக்கு உதவிட வேண்டுமென்ற அடிப்படையில், திமுக எம்எல்ஏக்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நேபாள மக்களின் இந்தத் துயர் துடைப்பு நிதிக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்