காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அந்த கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், தமிழக கடைகள் அடித்து உடைக்கப்பட்டன, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
சென்னையில் உள்ள கர்நாடக நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த 66 வங்கிகள், 68 உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட 171 இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.