ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, அவரது உடல் கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, மாரியம்மாள் உடலுக்கு திமுக எம்.பி. கனிமொழி கலிங்கப்பட்டிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.