சுப்பிரமணியன் சுவாமியின் சாப்பாடு பற்றி பேசிய கமல்: டுவிட்டர் சண்டை முற்றுகிறது!

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (12:48 IST)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தமிழ் இளைஞர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். நடிகர் கமலும் தன் பங்கிற்கு சுப்பிரமணியன் சுவாமியின் அந்த கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.


 
 
நாங்க பொறுக்கிங்கதான், ஆனா, எங்க பொறுக்கணும்ன்னு தெரிஞ்ச பொறுக்கிங்க, தமிழ் பொறுக்கிங்க, டெல்லியில் பொறுக்கலை. என கமல் பேச அன்று முதல் சுப்பிரமணியன் சுவாமி நடிகர் கமலை வசை பாட ஆரம்பித்தார். ஆனால் கமல் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தார்.
 
ஆனால் மீண்டும் சுப்பிரமணியன் சுவாமி கமலை முதுகெலும்பில்லா முட்டாள் என விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சுவாமியின் இந்த கருத்துக்கு நடிகர் கமல் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

 
அதில், நான் முரட்டுத்தனமாக பதில் அளிக்க மாட்டேன். என்னை விட அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம். எனக்கு சாப்பாட்டில் எலும்பு இருக்கனும், ஆனால் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் நன்றாக சாப்பிடுங்கள் சார் என பதிவிட்டார் கமல்.

வெப்துனியாவைப் படிக்கவும்