பொதுமக்கள் குடியிருக்கும் மையப்பகுதியில் எந்த நேரத்திலும் தாய்ந்து விழும் என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்கம்பங்களை மாற்றி அமைக்க இப்பகுதியை கண்காணிக்கும் மின்சாரத்துறை பணியாளரிடம் பொதுமக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழுதான மின்கம்பத்தை மாற்றி அமைக்க புதிய மின்கம்பங்களை பொதுமக்கள்தான் கொண்டு வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து மூட்டக்காம்பட்டி செயற்பொறியாளர் பார்த்தசாரதியிடம் போனில் கேட்டபோது: அனைக்கரைபட்டி காலனியில் பழுதான மின்கம்பம் பற்றி தகவல் இல்லை. புதிய மின்கம்பங்களை கொண்டு செல்வதில் பொதுமக்கள் யாரும் ஈடுபட தேவை இல்லை. பணியாளர்களே இப்பணிகளை செய்து விடுவார்கள். மேலும் உடனடியாக பழுதான மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.