முன்னதாக காலிங்கராயன்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டுக்கு காலிங்கராயரின் நேரடி வாரிசான அருண்குமார் காலிங்கராயர், அவரது மகன் சித்தார்த் காலிங்கராயர் மற்றும் ஜி.கே.நாகராஜ்,விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி காலிங்கராயன் வாய்க்காலுக்கு மரியாதை செய்தனர். அப்போது, ஜி.கே.நாகராஜ் பேசுகையில், காலிங்கராயர் மணிமண்டபத்திற்கு நிதிதுக்கிய தமிழக அரசின் செயல் பாராட்டத்தக்கது.