மாறன் சகோதரர்களின் 742 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதன், 1 ஏப்ரல் 2015 (19:29 IST)
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதர்களின் 742 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
சன் டரைக்ட் நிறுவனத்தில் 550 கோடி ரூபாயும் சவுத் ஏசியன் என்டர்டைன்மன்ட் நிறுவனத்திற்கு 200 கோடி முதலீடு வந்ததாகவும், இதனை கணக்கிட்டு 742 கோடி ரூபாயை அமலாக்கத் துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்