ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு: திருத்தப்பட்ட மனுவை திமுக தாக்கல் செய்தது

செவ்வாய், 14 ஜூலை 2015 (18:56 IST)
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் விடுதலைக்கு எதிரான திருத்தப்பட்ட மனுவை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருடைய விடுதலையை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் 9 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருந்தது. இந்நிலையில் திருத்தப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்