தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 53 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளில், சுமார் ஒரு கோடியே 38 லட்சம் வாடிக்கையாளர்கள் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால், சுமார் 15 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேராமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு முன்வைப்புத் தொகை ரூ.568 மற்றும் ஏப்ரல் மாதம், மே மாதம் மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான மொத்த மானியத் தொகை கிடைக்கும். அதற்கு பின்பு, இணையும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான மானியம் கிடைக்காது.