அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட பின் பேசிய எச்.ராஜா, “அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த மாதிரி தருணங்களில் வாழ்த்து சொல்வது, விழாக்களில் பங்கு கொள்வது தான் அரசியல் நாகரீகம். இதனால் பாஜகவுக்கு எந்த குறையும் வராது.
வழக்கில் பாஜக தலையிட்டது போல் பேசுவது நாட்டின் நீதித்துறையை கேவலப்படுத்தும் செயல். கீழ் நீதிமன்றம், தண்டனை வழங்கிய போதும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. நீதித்துறையின் நடவடிக்கையில் ஒரு போதும் தலையிட மாட்டோம்.
கடந்த தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் 4 சதவீதம்தான். இப்போது எங்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. 2 ஜி வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. அதனால் தி.மு.க. செல்வாக்கு மேலும் சரியும்.