சேலத்தில் தேமுதிக தலைவர் விஜயாகந்த் மனைவி பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து விட்டது, நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக தான் கூறினேன். முதல்வர் ஜெயலலிதா குறித்து, அவதூறான கருத்து ஏதையும் நான் தெரிவிக்கவில்லை.
ஆனால், சேலத்தில் நான் தங்கி இருந்த விடுதி முன்பு அதிமுகவினர் விளம்பரத்திற்காக கோஷம் போட்டனர். இதை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். ஆனால் தேர்தலை நடுநிலையோடு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம் என்றார்.