மேலும், ஜெயலலிதா கொடுத்த மிக்ஸி ஓடவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் இருந்து வெளியேறிய தொழிற்சாலைகள் இங்கு வரும். தமிழர்கள் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்றார்.
முன்னதாக, பெரியார், காமராஜர், எம்ஜிஆர், கலைஞர் போன்ற தலைவர்கள் மக்களிடம் சென்றார்கள். மக்கள் மத்தியில் வாழ்ந்தார்கள். அதேப்போல் ஸ்டாலினிடமும் அந்த நல்ல குணங்கள் இருக்கிறது என்றார் ராகுல் காந்தி.