சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தானாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்தது. இதனால் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் காலியாக உள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அவர், “தமிழகத்தில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்திற்கு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்“ என்றும் தெரிவித்தார்.