முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு கொடநாடு எஸ்டேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் மர்மமாக உள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை தேவை என்பது போல, கொடநாடு எஸ்டேட் காவலாளியின் மர்ம மரணம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும்.