இதனால் பொதுமக்கள் மத்தியில் முதல்வருக்கு என்ன ஆச்சு என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது. வதந்திகளை நம்புவதா, மருத்துவமனை சொல்வதை நம்புவதா என குழம்பி இருந்து சூழலில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவமனை அறிக்கை வெளியிட்டாலும், தமிழக அரசு ஏன் இது பற்றி ஒன்றும் கூறாமல் உள்ளது? அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள்? என்பதை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை? தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இது பற்றி பொதுமக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை? முதல்வரின் உடல் நிலை பற்றிய தகவலைப் பெற்று அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.