சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.எச்.பாண்டியன், தேர்தலுக்காக ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது போல, அவரின் சொத்துக்களை அபகரிக்கவும் கைரேகையை பதிவு செய்திருக்கலாம் என குற்றம் சாட்டினார்.
ஆகவே முன்னெச்சரிக்கையாக இருக்க முன்னர் நடந்த ஒரு நிகழ்வை கூறினார். ஜெயலலிதாவுடன் நடந்த ஒரு சட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஊடகங்கள் முன்னிலையில் என்னுடைய சொத்துக்கள், என்னுடைய நகைகள் உள்பட நான் சம்பாதித்த அனைத்தும் மக்களுக்கு போய் சேர வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.