விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் வரை தொண்டர்கள் பல்லாயிரம் பேர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சாலையோரம் காத்திருந்து அவரை வரவேற்றனர். அதிமுகவின் கொடிகளை ஏந்தியும் ஜெயலலிதாவின் படங்களைப் பிடித்துக்கொண்டும் பல வகையான பதாகைகளைப் பிடித்தவாறும் அவர்கள், வாழ்த்துக் குரல்களை எழுப்பினர். ஜெயலலிதா அவர்களை நோக்கிக் கையசைத்து, இரட்டை விரல்களைக் காட்டி, அவர் தம் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
போயஸ் கார்டனில் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஜெயா தொலைக்காட்சி, ஜெயலலிதாவின் வருகையை நேரலைக் காட்சியாக ஒளிபரப்பி வருகிறது. ஜெயலலிதாவின் கார் வரும் பாதை நெடுகிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.