இதைப் பார்த்த காவல் துறையினர், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். அப்போது, "அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும்“ என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர், அவரை வேப்பேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரை எச்சரித்தனர். பின்னர் மாயாவை காவல் துறையினர் தங்கள் ஜீப்பில் ஏற்றிச் சென்று சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டனர்.