இந்நிலையில் நேற்று இரவு முதலே அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். நள்ளிரவு முதலே முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வந்தாலும் அவர் டிஸ்சார்ஜ் ஆகவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார், அவருடைய காய்ச்சர் குணமடைந்து விட்டது. இன்று காலை வழக்கம் போல் அவர் எடுத்துக்கொள்ளும் உணவை எடுத்தார். அவர் வழக்கம் போல் உணவருந்தி வருகிறார். அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.