அவ்வறிக்கையில், கூறியிருப்பதாவது, ”முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. நோய் எதிர்ப்பு மருந்து வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” என்றனர்.
மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அப்பல்லோவிற்கு வந்துள்ளனர். முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களூடன் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். பின், எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.