வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் - ஜெயலலிதா இரங்கல்
வியாழன், 9 ஜூன் 2016 (09:46 IST)
முதல்வர் ஜெயலலிதா சென்னை சேக்ரட் ஹார்ட் சர்ச் பார்க் பள்ளியில் படித்தபோது, அவருக்கு ஆசிரியையாக இருந்த கேத்தரின் சைமன் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை சர்ச் பார்க் பள்ளி ஆசிரியை கேத்தரின் சைமன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த இரங்கல் செய்தியில், “சர்ச் பார்க் பள்ளியில் 1958 முதல் 1964 வரை தாம் படித்தபோது ஆசிரியையாக இருந்தவர் கேத்தரின். எனது வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்தரின்” என்று தெரிவித்துள்ளார்.