பலரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் நீண்டகால தோழி கீதா என்பவர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து தனியார் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு கீதா பேட்டியளித்துள்ளார். அதில் ஜெயலலிதா நூறு சதவீதம் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது மரணத்திற்கு காரணம் சசிகலா தரப்பு தான் என கீதா அடித்துப் பேசுகிறார். சசிகலா தரப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல விஷயங்கள் செய்திருக்கிறார் எனவும் அதனால் ஜெயலலிதா தண்டனை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்.