ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (04:02 IST)
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏபர்ல் 13 ஆம் தேதி முதல் மே மாதம் 12 ஆம் தேதி வரை தேர்தல் சுற்றுப் பயணத் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி ஏப்ரல்13 ஆம் தேதி தருமபுரி, பர்கூர், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, பென்னாகரம், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிபட்டி, ஒசூர், அரூர், தளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே போல் பிரசார பயணத்தின் 4 ஆம் நாள் முதல் 15 ஆம் நாள் வரை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்