தன்னுடைய உணவை தானே சாப்பிடும் ஜெயலலிதா: விரைவில் வீடு திரும்புவார் என அதிமுக தகவல்!

வெள்ளி, 21 அக்டோபர் 2016 (09:06 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வார காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கடந்த ஒரு வார காலமாக செய்திகள் வருகின்றன.


 
 
தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு, லண்டன் மருத்துவர், எயிம்ஸ் மருத்துவ குழு, அப்பல்லோ மருத்துவ குழு, சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்கள் என தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களின் சிகிச்சைகள் பலனளித்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமாகி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் முதல்வர் ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்வதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்