கமுதியில் 1 + முத்துராமலிங்கபுரத்தில் 1
தமிழ்நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் சூரிய மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சூரிய மின் சக்திக் கொள்கையை நான் 20.10.2012 அன்று வெளியிட்டேன். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 102 மெகாவாட் நிறுவுத் திறன் கொண்ட 49 சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 708 மெகாவாட் அளவிற்குச் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய தொழில் முனைவோருக்கு இசைவுக் கடிதங்களை வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டப்படும் 60,000 பசுமை வீடுகளுக்கு சூரிய மின் சக்தி வசதி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 20,000 தெரு விளக்குகள் சூரிய மின் சக்தி வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளன.