தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வில் ஏ.பி.பரதன் தன்னலம் கருதாது, உழைக்கும் வர்க்கத்துக்கும், ஏழைகளுக்கும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கும் பாடுபட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனைகள் ஏற்பட்ட போது, பல்வேறு அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் அவருடைய பேச்சுவார்த்தை திறமை முக்கிய பங்கு வகித்தது.