ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த அவமானம்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (20:10 IST)
கடந்த மாதம் 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 


 
 
அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அக்காள் மகனுமான வி.என்.சுதாகரன் இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
 
ஆனால் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை, பின் காரில் இருந்தபடியே உள்ளே இருந்தவர்களுக்கு செல்போனில் தொடர்புகொண்டார். ஆனாலும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதை அடுத்து, அவர் விரக்தியுடன் திரும்பிச்சென்றார் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்