மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க, சினிமா இயக்குனர் பாரதிராஜா இன்று அப்பல்லோ மருத்துவனைக்கு வந்தார். அங்கு சில அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அவர் பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
முதலமைச்சர் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வருவார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, மக்களின் பிரார்த்தனையால்தான் அவர் குணமடைந்தார். அதுபோலவே, முதல்வரும் ஜெயலலிதாவும் நடுத்தரமக்களின் பிரார்த்தனையால் குணமடந்துள்ளார்.