முன்னதாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு நகல், சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்குச் சிறை வளாகத்திலும் வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்குக் கையசைத்தபடி, ஜெயலலிதா பயணித்தார். அவர் எச்.ஏ.எல். விமான நிலையத்தைச் சென்றடைந்து, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டார்.