இதில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்தும் இதற்காக நிலுவையில் உள்ள அரசு நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது, சட்டசபையில் விதி எண் 110 கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடுவது, அத் திட்டங்களை விரைவாக தொடங்குவது பற்றியும் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கியுள்ளார்.