வழக்கமாக அதிமுகவினர் தங்கள் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள். அவர் மறைந்த பின், முதலில் சசிகலா படமும், அதன் பின் ஜெ.வின் படத்தையும் சிலர் வைத்திருந்தனர். தற்போது சசிகலாவின் புகைப்படம் மட்டுமே பெரும்பாலான அதிமுகவினரின் சட்டைப் பையை அலங்கரிக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில், குப்பையில் வீசப்பட்ட ஜெ.வின் படங்கள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவை, 2017ம் ஆண்டை ஒட்டி அதிமுக சார்பில், கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக அச்சடிக்கப்பட்ட காலண்டர்கள் எனத் தெரிகிறது.