வதந்திக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவில்லை

வியாழன், 9 பிப்ரவரி 2017 (19:31 IST)
ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் தற்போது அவர் சசிகலாவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார்.


 


கூவாத்தூர் ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சசிகலா தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் 2 மணியளவில் ரிசார்ட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதன் பின்னர் அவரை பற்றி செய்திகள் எதுவும் இல்லை. அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைவார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஆளுநரை சந்திக்க சசிகலாவுடன் சென்றுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு என்ற பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்