கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவால், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோவை மருத்துவ மனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த செய்தியும், போட்டோவும் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியானது.