முஸ்லீம் மக்களின் புனித நோன்பான, ரமலான் விழாவுக்கு, தமிழக அரசு நோன்புக் கஞ்சி அரிசி வழங்கவில்லை என ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, திருவாரூரில், மனிதநேய மக்கள் கட்சி சட்டப் பேரவைக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முஸ்லீம்களின் புனித நோன்பு ரமலான் நோன்பு. இந்த நோன்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழக அரசு நோன்புக் கஞ்சி அரிசி வழங்கவில்லை. நோன்புக் கஞ்சிக்கு வழங்கும் அரிசியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.