இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவு தலைவர் வசீகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசின் ஊழல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சிதான் வெளியிட்டது. அதுபோலவே, தமிழகத்தில் அரசுதுறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை ஜனவரி 1ஆம் தேதி வெளியிட உள்ளோம்.
தமிழகத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல் செய்துள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அது குறித்து, தமிழக கவர்னரிடம் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஊழல் குறித்து புகார் பட்டியலை அளித்துள்ளன.